வவுனியா செட்டிக்குளத்திலுள்ள விநாயக ஆலய கும்பாபிஷேகத்தின் போது அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
செட்டிகுளம் முகத்தான் குளம் பகுதியிலுள்ள விநாயகர் ஆலயத்தின் வருடாந்த கும்பாபிஷேக நிகழ்வு இன்று நடைபெறுகிறது.
இன்றைய பூஜையின் போது ஆலயத்தில் வைக்கப்பட்ட நாகபூஷணி அம்மனுக்கு தீப ஆராதனை செய்யப்பட்டது.
இதன் போது திடீரென அங்கு நாகபாம்பு ஒன்று தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அம்மனின் திருவுருத்தில் ஏறிய நாக பாம்பு பக்தர்களுக்கு காட்சி கொடுத்துள்ளது.
தீப ஆராதனை முடியும் வரையில் அங்கேயே இருந்துள்ளது. ஆராதனை முடிந்தவுடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளது.