சனி, 31 மார்ச், 2018

வற்றாப்பளை அம்மன் மகா கும்பாபிசேகம்!

வரலாற்று புகழ் பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய புனருத்தாபன மகா கும்பாபிசேக பெருவிழா நேற்று சிறப்புற நடைபெற்றது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஆலயம் பாலஸ்தானம் செய்யப்பட்டு ஆலய புனரமைப்பு பணிகள் பல கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லினால் ஆலய புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு அலங்கார வேலைகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிசேகம் நடைபெற்றது.
gல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டமையை காணக்கூடியதாக இருந்தது.