பிரசித்தி பெற்ற யாழ். சுன்னாகம் ஸ்ரீ கதிரமலை சிவன் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் சொர்ணாம்பிகை அம்மனின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகிய மகோற்சவம் தொடர்ச்சியாக பத்துத் தினங்களாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆலய உற்சவத்தில் இன்று புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், நாளை மறுதினம் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் இறைவன் எழுந்தருளி, வான வேடிக்கை மற்றும் கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஐந்தாம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று இரவு ஏழு மணிக்கு கொடியிறக்கத்துடன், மகோற்சவ நிகழ்வுகள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன்
ஆரம்பமாகிய மகோற்சவம் தொடர்ச்சியாக பத்துத் தினங்களாக இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், ஆலய உற்சவத்தில் இன்று புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், நாளை மறுதினம் தேர் திருவிழாவும் இடம்பெறவுள்ளது.
அலங்கரிக்கப்பட்ட சித்திரத் தேரில் இறைவன் எழுந்தருளி, வான வேடிக்கை மற்றும் கலை, கலாச்சார நிகழ்வுகளுடன் தேர் திருவிழா இடம்பெறவுள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஐந்தாம் திகதி தீர்த்தோற்சவம் இடம்பெற்று இரவு ஏழு மணிக்கு கொடியிறக்கத்துடன், மகோற்சவ நிகழ்வுகள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.