செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

மட்டு, கல்லடி திருச்செந்தூர் முருகன் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

ஈழத்து திருச்செந்தூர் என புகழ்பெற்ற மட்டக்களப்பு, கல்லடி திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தமிழ் மரபுகளையும், பண்பாடுகளையும்
கொண்டதாக இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நடைபெற்றுவருகின்றது.
இன்று காலை கல்லடி சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து கொடிச்சீலை கொண்டுவரப்பட்டு, ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.