வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016

குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் கலந்து சிறப்பித்த “சிவஞான குரு. சரவண மாணிக்கவாசக சுவாமிகள்

திருக்கயிலாய பரம்பரைத் திருவாதவூரர் வழி ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் திருமடாலய 57 ஆவது குருமகா சந்நிதானம் “சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் நேற்றுப் புதன்கிழமை(17) யாழ். குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் இரதோற்சவத்தில் கலந்து
கொண்டு சிறப்பித்தார்.

தேருக்கு எழுந்தருளுவதற்காக எம்பெருமான் ஆலய உள்வீதியில் வலம் வந்த வேளையில் ஆலயத்திற்குப் பிரசன்னமாகிய “சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகளுக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிர்வாகத்தினர் மற்றும் ஊர்ப் பெரியவர்களால் ஆலய வெளிவீதியிலிருந்து வரவேற்று அழைத்துச் செல்லப்பட்ட சுவாமிகள் ஆலய உள்வீதியில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கிரியா கலாபமணி சிவஸ்ரீ கி. வைத்தீஸ்வரக் குருக்கள் மற்றும் ஆலயத் தலைவரால்”சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் பொன்னாடை போர்த்திக் கெளரவிக்கப்பட்டார்.
இந்தியாவில் சைவசமய குரவர்களில் ஒருவராக வந்துதித்த மாணிக்க வாசக சுவாமிகள் சீட பரம்பரையில் உருவான “சிவஞான குரு” குரு ஸ்ரீமத் இராஜ. சரவண மாணிக்கவாசக சுவாமிகள் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தி வரும் ஞானியாவார்.