செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட விரதம்

சிலருக்கு வாழ்க்கையில் எந்த மாற்றமும் ஏற்படாமல் தொடர்ந்து ஒரே மாதிரியாகவே சென்று கொண்டிருக்கும்.


அப்படிப்பட்டவர்கள் வளர்பிறை வரும் முதல்
சனிக்கிழமையன்று விநாயகரை வணங்கி பூஜை செய்து வாசலில் 11 மாவிலைகளை கட்டிவிட வேண்டும்.

இஷ்ட தெய்வம் குல தெய்வத்தை நினைத்து பகல் பொழுதில் விரதம் இருந்து வர வேண்டும்.

3 மாதங்களில் வரும் வளர்பிறை சனிக்கிழமைகளில் மட்டும் இதே போல 11 மாவிலைகளை மாற்றி கட்டி மேற்கூறியவாறே செய்து வர வேண்டும்.

அடுத்த சில நாட்களில் நீங்கள் நினைக்கும் விஷயங்களில் ஏதாவது மாற்றம் நடப்பதை கண்கூடாக காணலாம்.