வியாழன், 3 மே, 2018

யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை குளங்கரை மருதடி ஸ்ரீ காமாக்ஷி நாச்சிமார் ஆலயத்தின் திருக்கல்யாண உற்சவம் மிக விமர்சையாக ஆலயத்தில் நடைபெற்றது..
இவ்வாலயத்தின் கொடியேற்ற மஹோற்சவம் 15.04.2018 அன்று ஆரம்பமாகி 29.04.2018 அன்று இரதோற்வமும்,மறு நாள் தீர்த்ததோற்சவத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடைந்ததுடன் நேற்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது..
ஆலயத்தில் மூலவ விக்கிரமாக வீற்று இருக்கும் ஸ்ரீ நாச்சிமார் காமாட்சி அம்பாளுக்கும் வசந்த மண்டவத்தில் வீற்று இருக்கும் விநாயகர்,மற்றும் நாச்சிமார் காமாட்சி அம்பாள்,மற்றும் முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள்,ஆராதணைகள் என்ப இடம்பெற்று வசந்தமண்டபத்தில் இருந்து எழுந்தருளி உள்வீதியுடாக வலம் வந்து கலைநய அம்ச பீடத்தில் வீற்று பக்தர்களுக்குஅருள்பாலித்தனர்
குறித்த திருக்கல்யாண உற்வத்தினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவராயுதக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் உற்சவத்தினை நடாத்தி வைத்தனர்
இதில் இவ் திருக்கல்யாண உற்வசத்தில் கலந்துகொள்ளுவதற்கு பலபாகங்களில் இருந்து வருகைதந்த தமது இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.