செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

நல்லூரில் அறிமுகமாகியுள்ள பனம் யோகட்!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு பனை அபிவிருத்திச் சபையின் கீழ் இயங்கும் பனை ஆராய்ச்சி நிறுவனத்தால் புதிதாக பனம் யோகட் அறிகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய வளாகத்தில் விற்பனைக்கு
வைக்கப்பட்டுள்ள குறித்த யோகட் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
40 ரூபா விலையுள்ள 80 கிராம் நிறையுடைய இந்தப் பனம் யோகட்டை , இயற்கை உணவை விரும்பும் பலரும் ஆர்வமுடன் வாங்கிச் சுவைத்து வருவதை அவதானிக்க முடிகிறது.
பனங்களி, பால்மா, சீனி என்பவற்றை முக்கிய உள்ளடக்கங்களாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த பனம் யோகட்டை குறிப்பாகச் சிறுவர்கள் அதிகமாக விரும்பி சுவைக்கின்றனர்.
கைதடியில் அமைந்துள்ள பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் உணவுத் தொழில்நுட்ப ஆய்வு கூடத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர்களினால் இந்த யோகட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நல்லூர் மகோற்சவப் பெருவிழாவை முன்னிட்டு விஷேடமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த யோக்கட்டின் விற்பனையை யாழ். குடாநாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இயற்கையான பனம் பழம் வாசமும், அதன் தனித்துவமான சுவையும் தம்மைப் பெரிதும் கவந்துள்ளதுள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்

.